உள்நாடு

மேலதிக வகுப்புக்களுக்கான தடை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான கல்வி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டமை நேற்று (17) நள்ளிரவு முதல் முடிவடையத் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய பாதகமான சூழ்நிலை காரணமாக பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தடை உத்தரவு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று மாலை தீர்மானமிக்க சந்திப்பு

”சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பம்.

editor

நடிகர் ஷாருக் கான் இலங்கை வரமாட்டார்

editor