உள்நாடு

துப்பாக்கிச்சூட்டுக்கு பொலிசாருக்கும் அனுமதி

(UTV | கொழும்பு) – வன்முறையாக நடந்துகொள்பவர்களுக்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை எடுக்குமாறும், தேவையான போது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சட்டப்பூர்வமான பலத்தை பயன்படுத்துமாறும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கலவரக்காரர்கள் அல்லது வன்முறைக் கும்பல்களால் உயிரிழப்பையோ அல்லது கொள்ளையடிப்பதையோ தடுக்கவும், பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம், கொள்ளை அல்லது உயிர் சேதம் அல்லது கடுமையான காயங்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Related posts

மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இலங்கைக்கு

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் தீர்மானமில்லை

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ தங்கத்துடன் மூன்று பேர் கடலில் வைத்து கைது

editor