உள்நாடுகிசு கிசு

பிரதமரை பதவி விலகக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – பல அமைச்சரவை அமைச்சர்களின் ஆதரவுடன், ஜனாதிபதி தலைமையில், இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பதவியை இராஜினாமா செய்வது குறித்து பரிசீலிக்க பிரதமரிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அறிவிப்பொன்றினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை அவரது இராஜினாமா இடம்பெறவுள்ளதாகவும் உள்ளக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கொரோனாவிலிருந்து 130 பேர் குணமடைந்தனர்

ரஷ்ய எண்ணெயை கடன் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்

மஹர சம்பவம் : இறுதி அறிக்கை 30 அன்று