வணிகம்

கொழும்பிலிருந்து இந்தியாவின் விசாகபட்டினத்திற்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை விமான நிறுவனம் கொழும்பிலிருந்து இந்தியாவின் விசாகபட்டினத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் முதல், வாரத்திற்கு 04 நாட்கள் விசாகபட்டினம் வரை நேரடி விமான சேவையை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வருத் ஜூலை மாதம் 08ம் திகதி முதல் குறித்த இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.

அதன்படி ஒவ்வொரு செவ்வாய், புதன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த நேரடி விமான சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் 02 உற்பத்தி வலயங்கள்

கடற்றொழிலாளர்களுக்கு அடையாள அட்டை அறிமுகம்…

வர்த்தக நிறுவனங்களின் தகவல் பெறும் கால எல்லை நீடிப்பு