உள்நாடு

அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய வழக்கிலிருந்து பௌசி விடுவிப்பு

(UTV | கொழும்பு) –  அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 1 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அரசாங்கத்தின் போது புனர்வாழ்வு அமைச்சுக்காக நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 335 ஆக உயர்வு

ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

பாடசாலை மாணவர்கள் உட்பட 10 சந்தேக நபர்கள் சாய்ந்தமருதில் கைது!