உள்நாடு

தென் கடலில் 300 கிலோ போதைப்பொருளுடன் 6 பேர் கைது

(UTV | கொழும்பு) – தெற்கு கடல் பரப்பில், பாரியளவான போதைப்பொருளுடன், பலநாள் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் அரச புலனாய்வு பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில், இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பலநாள் படகில் 300 கிலோகிராம் ஹெரோயினும். 25 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதன்போது, 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

இரு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வு

யோஷித ராஜபக்‌ஷவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 துப்பாக்கிகள்!

editor

சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது