உள்நாடு

மின்வெட்டினை நிறுத்தக் கோரி ஜனாதிபதி வீட்டுக்கு முன்பாக நபர் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – நுகேகொடை – மிரிஹானையில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தினமும் மேற்கொள்ளப்படும் மின்வெட்டினை உடனடியாக நிறுத்துமாறு கோரி குறித்த நபர் மின்மாற்றியில் ஏறிய பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது அவர் போதையில் இருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

விசேட வைத்திய பரிசோதனைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் அபாயம்

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மொபிடெல் உபகார சலுகை – ஜனாதிபதி பணிப்பு

சஜித்தை வெல்ல வைப்பது தொடர்பில் ஹரீஸ் எம்.பி தலைமையில் நற்பிட்டிமுனையில் கூட்டம்.

editor