உள்நாடு

பேரூந்துக்கு தீ வைப்பு : ஆர்ப்பாட்டம் பதற்ற நிலையிலும் தொடர்கிறது

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு அருகில் இன்று ( 31) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது நிலையில் அங்கு மேலும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவருக்கும் மற்றுமொருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிசார் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சூழ்நிலை தொடர்ந்தும் பதற்ற நிலையில் உள்ளதோடு அங்குள்ள பேரூந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் குறித்து IMF அதிரடி அறிவிப்பு

editor

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானி கடமைகளை பொறுப்பேற்றார்

editor

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்!

editor