உள்நாடு

“அரசின் அதிகார வெறித்தனமான செயற்பாடுகளால் நாடு நிலையற்றுள்ளது” – விமல்

(UTV | கொழும்பு)  – நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் கடுமையான தீர்மானங்களை எடுப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைந்துள்ள 11 கட்சிகளின் அவசரக் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அரசாங்கத்தின் அதிகார வெறித்தனமான செயற்பாடுகள் மற்றும் அமெரிக்க சார்பு நபர்களின் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுதியான அமைச்சர்கள் கூட தமது பதவிகளை இராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

மோசமான தலைமைத்துவத்தால் நாடு தற்போது நிலையற்றதாக இருப்பதாக அவர் கூறினார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் பல தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் மூடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மின்வெட்டு மற்றும் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு எந்த நாட்டிடமிருந்தோ கடன் பெறுவதனால் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது, அதேவேளை அடுத்த வருடத்தில் நிலைமை மோசமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தெரிவித்தார்.

அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாகவும், தற்போதைய நிர்வாகம் மக்களின் சுமைகளை நிவர்த்தி செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் அரச வளங்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்னர் அத்தகைய மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

மிலேனியம் சவால் கூட்டுத்தாபனத்தை மாற்று முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் விக்டோரியா நூலன்ட் இலங்கை வந்ததாக அவர் கூறினார்.

நாட்டை திவாலான நிலைக்கு தள்ளுவதற்கு அமெரிக்க ஆதரவு பிரிவுகளுக்கு இடமளிக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

மலையகத்துக்கான ரயில் போக்குவரத்தில் தாமதம்!

இரண்டு பிரபலமான புதிய அங்கீகாரங்களை பெற்ற Amazon Campus!

இன்று முதல் 11 இடங்களில் Rapid Antigen பரிசோதனை