உள்நாடு

வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் ‘அசானி’ புயல்

(UTV | கொழும்பு) –  வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் தீவை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் அந்தமான் நிக்கோபா் பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை மறுநாள் வரை மூடப்பட்டுள்ளன.

எனவே அந்தமான், நிக்கோபாா் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related posts

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு “Pekoe trail” திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் – சாகல ரத்நாயக்க

ருஷ்தியின் கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளிட்டுள்ள அறிக்கை

editor

சீனாவில் இருந்து வந்த விமானம் உட்பட மேலும் சில விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது

editor