கிசு கிசு

பால்மா தாட்டுப்பாடும் டோக்கன் முறைமையும்

(UTV | கொழும்பு) – சந்தையில் பால் மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் அதிக விலைக்கு பால் மா விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் டாலர்கள் தட்டுப்பாடு காரணமாக பால்மாவுக்கு இன்னும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக நுகேகொட மிரிஹானவில் உள்ள உள்ளூர் பால் மா கடைக்கு முன்பாக மக்கள் பால் மாவை கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்றனர். மேலும் சிலர் பால் மா இல்லாத காரணத்தினால் அவர்களை திட்டியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பால்மா வழங்கும் முறை இருந்தும், விற்பனை செய்யும் இடத்தில் பால்மா வாங்க டோக்கன் வழங்கப்படவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் உள்ள கடைகளில் மக்கள் வரிசையில் நிற்பதை தடுக்கும் வகையில் பொலிசார் இந்த டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

2019 ஐ மறந்துவிடாதே – 2020 இல் தொடர்ந்து இருங்கள் [VIDEO]

பொலிஸாரை கெட்ட வார்த்தையில் திட்டித் தீர்த்த மருத்துவர்…

இலங்கையில் ரஜினிகாந்த!