வகைப்படுத்தப்படாத

களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி: மேலும் இருவர் காயம்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை – வெலிபன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளவர், கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை இனங்கண்டு அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிபன்ன காவற்துறை முன்னெடுத்துள்ளது.

Related posts

தமிழக கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை

பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

US launches inquiry into French plan to tax tech giants