உள்நாடு

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் திங்களன்று விடுவிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள, அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளை மறுதினம் விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இடம்பெற்ற நிதியமைச்சருடனான கலந்துரையாடலின் போது, குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் நிதியமைச்சின் தலையீட்டில் துறைமுகத்தில் தேங்கியிருந்த 500 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தன.

Related posts

மாணவர்கள் போராட்டம் – காலவரையறையின்றி மூடப்பட்ட பல்கலைக்கழகம்

editor

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய குடும்பம் – பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் அதிரடி நடவடிக்கையால் உயிருடன் மீட்பு

editor

புளிச்சாக்குளம் சிடார் விளையாட்டுக்கழக மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு – ரிஷாட் எம்.பி பங்கேற்பு!