உள்நாடு

மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

(UTV | கொழும்பு) –  சம்பள உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி 18 சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொடர் பணிப்புறக்கணிப்பு 3 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தநிலையில், தமது பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்க போராட்டத்தினை கைவிடப்போவதில்லையென சுகாதார சேவையாளர்களின் தேசிய சம்மேளனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் கிறீஸ் பூதம் ? – ஈ.பி.டி.பி சந்தேகம் – மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்

editor

நாடளாவிய ரீதியாக இன்று முதல் சேதன பசளை விநியோகம்

கெஹெலியவின் மகன் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

editor