உள்நாடு

நாட்டினை முடக்க எந்த திட்டமும் இல்லை

(UTV | கொழும்பு) – தற்போதைய சூழ்நிலையில் நாட்டைப் முடக்குதலோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டமோ எதுவும் இல்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றினை கருத்தில் கொண்டு எதிர்கால நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், எனினும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது மற்றும் பூஸ்டர் தடுப்பூசியினை பெறுவது கொவிட்-19 சவாலை சமாளிக்க உதவும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

நவீன் திஸாநாயக்கவுக்கு மற்றுமொரு பதவி

இலங்கையின் முதல் நீர் மின்கலம் மின்சார திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

editor

‘ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது