உள்நாடு

பிரதமர் தலைமையில் ஆளும் கட்சியினர் விசேட கூட்டம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று(18) ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட கூட்டமொன்றை நடாத்த உள்ளனர்.

ஒன்பதாவது பாராளுமன்றின் இரண்டாவது கூட்டத் தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்ததன் பின்னர் இந்த ஆளும் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அவசரமாகக் கூடியது முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு!

editor

இலங்கையில் புதிய 2000 ரூபா தாள்கள் மக்கள் பாவனைக்கு!

editor

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கைப்பேசிகளை கொண்டு செல்ல தடை