உள்நாடு

பாராளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு

(UTV | கொழும்பு) – கடந்த 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

ஆளும், எதிர்கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார உரையாற்றிய போது, அதற்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் செயற்பட்டிருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், ஆளும் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை தாக்குவதற்கும் முயற்சித்துள்ளதாக அந்த கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்.

Related posts

MAS Holdings நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி

பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை – பிரதமர் ஹரினி

editor

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்கள் குறித்து வெளியான செய்தி

editor