உள்நாடு

இரண்டாவது நாளாக சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – சுகாதார சேவையாளர்கள் இரண்டாம் நாளாக இன்று (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாதியர், இடைநிலை வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் நேற்று (24) முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளன.

சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று வைத்தியசாலைக்கு சென்றிருந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது

வைத்தியசாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய 18 வயது மாணவி – மட்டக்களப்பில் சம்பவம்

editor