உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

(UTV | கொழும்பு) –  தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதைத் அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வட மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது.

அத்துடன் வி.சிவஞானசோதியின் மறைவை அடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுந்தரம் அருமைநாயகம் இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகக் கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு ஜெருசலேம் பல்கலைக்கழக இறையியல் கல்லூரியில் கௌரவ முனைவர் பட்டம்

editor

இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம் – பசில் ராஜபக்‌ஷ