உள்நாடு

18 – 19 வயதினருக்கு பைஸர் தடுப்பூசி வழங்கும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் 18 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தத்தமது பாடசாலைகளிலேயே பைசர் (Pfizer) தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென இராணுவத்தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு செல்லாத 18 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்டவர்கள் தாம் வசிக்கும் பகுதியிலுள்ள பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

09ஆம் திகதி புதிய அமைச்சரவை : எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சு

பசறை பேரூந்து விபத்து : சாரதிக்கு எதிராக 52 வழக்குகளை தாக்கல் செய்ய நடவடிக்கை

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு