உள்நாடு

தடுப்பூசி தொடர்பில் இராணுவத் தளபதியின் விளக்கம்

(UTV | கொழும்பு) – ஃபைசர் மற்றும் மொடர்னா கொவிட் -19 தடுப்பூசிகள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகளைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மாணவர் நாட்டை விட்டு வெளியேறுகிறார் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்கு மொடர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

Related posts

  பத்து மாதங்களில் இரண்டரை லட்சம் பேர் வெளிநாடு சென்றுள்ளனர்

இலங்கை தொடர்பான IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம்

வைத்தியசாலையில் சிறுவருக்கான இருதய சிகிச்சைகள் நிறுத்தம் – தினேஷ் யாப்பா.