உள்நாடு

இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள ரயில் சேவைகள்

(UTV | கொழும்பு) – சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய தொடருந்து சேவைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினத்தில் மாகாணங்களுக்கு இடையில் 30 ரயில்வே சேவைகள் இடம்பெறும் என குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அரச சேவையாளர் வழமைப்போன்று இன்று பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் விசேட ரயில் சேவைகளும் இடம்பெறவுள்ளன.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் தேவை ஏற்படும் பட்சத்தில் மேலும் ரயில் சேவைகளை அதிகரிக்கவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த முழுமையான புலனாய்வு அறிக்கை தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க புதிய குழு

எதிர்க்கட்சிகளை முடக்க அரசாங்கம் தீவிர கவனம் – ரஞ்சித் மத்தும பண்டார

editor

இறக்குமதி அரிசி தொடர்பில் வெளியான தகவல்

editor