உள்நாடு

தனிமைப்படுத்தலும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களும்

(UTV | கொழும்பு) – கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தொட்ட பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட யட்டிவாவல கிராம சேவகர் பிரிவில் சாகராதெனிய தோட்டம் இன்று (04) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் மஹா வஸ்கடுவ தெற்கு கிராம சேவகர் பிரிவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லார் 3 மற்றும் பெரியகல்லார் 3 தெற்கு கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தின் பெரமன தெற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.

   

Related posts

சர்வதேச மொழிபெயர்ப்புத் தினம் பாராளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது

editor

மத வேறுபாடுகளைக் கடந்து நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம்

editor

இராணுவ உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை