உள்நாடுவணிகம்

பாண் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) –  பாண் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்குமாறு அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கோதுமை மா விநியோகிக்கும் இரண்டு பிரதான நிறுவனங்களில் ஒரு நிறுவனம், ஒரு கிலோ மாவின் விலையை 18 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தாங்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் தலையீடு செய்து 10 ரூபாவை விடவும் குறைந்த விலையிலாவது பாணின் விலையை அதிகரித்து, தமது பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இன்று இலங்கைக்கு

மலையக சமூகம் வைத்த எதிர்பார்ப்பு ஒருபோதும் தோல்வியடையாது – ஜனாதிபதி அநுர

editor

நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த பெண் உயிர்மாய்ப்பு

editor