உலகம்

ஜோ பைடனுக்கு மெழுகுச்சிலை

(UTV |  வொஷிங்டன்) – அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மெழுகுச்சிலை அச்சு அசலாக வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் மாபெரும் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள க்ரிவின் என்ற மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு இன்று முதல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை, சிலை என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் ஜோ பைடன் அவர்களே அங்கு நிற்பதைப் போன்று அச்சு அசலாக இருப்பதை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த சிலையை வடிவமைத்த கலைஞர்களுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருங்காட்சியகத்தில் இந்திய பிரபலங்கள் உள்பட பல உலகப் பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  

Related posts

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல்களை நிறுத்த இணக்கம் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

editor

உலகளவில் 54 இலட்சத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்

செப். 13 முதல் கட்டுப்பாடுகள் தளா்வு