உள்நாடு

இன்றும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

(UTV | கொழும்பு) – முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை ஆகிய 3 காவல்துறை அதிகார பிரிவுகள், நேற்றிரவு 11 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சிலவா அறிவித்துள்ளார்.

அதேநேரம், இன்று (18) காலை மேலும் இரண்டு மாவட்டங்களின் 3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இதன்படி கம்பஹா மாவட்டத்தின் கப்புகொட செபஸ்டியன் வீதியில் இருந்து தெபடிய வீதி வரையான பகுதியும், பிட்டிபன – லெல்லம பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தின் ரொட்டே கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை இனியும் நீடிப்பதில்லை

BREAKING NEWS – அமைச்சரவையில் மாற்றம் – முனீர் முழப்பர் | சமய விவகார பிரதி அமைச்சர் – அர்கம் இல்யாஸ் | மின் சக்தி பிரதி அமைச்சர்

editor

பொலிஸ் உயர் பதவிகளில் மாற்றம்

editor