உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : சட்டமா அதிபரிடமிருந்து 130 பக்க அறிக்கை

(UTV | கொழும்பு) – சஹ்ரானின் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியமான சந்தேகநபர்கள் 42 பேருக்கு எதிரான சாட்சியங்களை எழுத்துமூலமாக உறுதிப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் 130 பக்கங்களைக்கொண்ட அறிக்கையொன்றை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாக்குதலுடன் தொடர்புடைய, 5 பேர் தொடர்பான விசாரணைகள் முழுமை பெறவில்லை எனவும், இதற்கான விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து உறுதிப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபருக்கு, சட்ட மா அதிபர் மேலும் அறிவித்துள்ளார்.

Related posts

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

13ஆவது திருத்தச் சட்டத்தின் சில நடைமுறைகள் சாத்தியமற்றது – ஜனாதிபதி

ஐ.தே.க விசேட செயற்குழுக் கூட்டம் இன்று