உள்நாடு

கொழும்பு தவிர்ந்த ஐந்து மாவட்டங்கள் முடக்கம்

(UTV | கொழும்பு) – நாட்டில் 5 மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம சேவர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டம் –
மஹர காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட ஹெட்டிகெஹெல்கல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவு

கட்டான காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட கே.சி.சில்வா கிராம சேவகர் பிரிவு மற்றும் கதிரான வடக்கு கிராம சேவகர் பிரிவின் அட்டபகஹாவத்த கிராமம், கதிரான தெற்கு கிராம சேவகர் பிரிவின் பேஷகர்ம கிராமம்

வத்தளை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட சேதவத்தை கிராம சேவகர் பிரிவின் மஹா பமுனுகம பகுதி, குன்ஜகஹா வத்தை கிராம சேவகர் பிரிவின் 44ஆம் இலக்க தெரு, நில்சிறிகம கிராம சேவகர் பிரிவின் 3ஆம் மற்றும் 7ஆம் இலக்க தெருக்கள்

அம்பாறை மாவட்டம் –
தெஹியத்தகண்டி காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நவமெதகம கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நவமெதகம பகுதி, பக்மிதெனிய கிராம சேவர் பிரிவுக்குட்பட்ட ரன்ஹெலகம பகுதி, சேருபிட்டிய கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட சேருபிட்டிய உப பிரிவு

இரத்தினப்புரி மாவட்டம் –
இரத்தினப்புரி காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட அங்கம்மான கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டம் –
மொரகஹாஹேன காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பலன்னொறுவ, கொரலைகம, கும்புக்க மேற்கு கிராம சேவகர் பிரிவுகள்

ஹொரனை காவல்துறை அதிகாரப் பிரிவுக்குட்பட்ட நர்த்தனகல கிராம சேவகர் பிரிவு

மொனராகலை மாவட்டம் –
மொனராகாலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பொஹிட்டிய கிராம சேவகர் பிரிவு

   

Related posts

பாடசாலைகள் மூடப்படாது அபிவிருத்தி செய்வதே நோக்கம் – பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன

editor

நாட்டில் நிலையான இயக்க நடைமுறையை மேம்படுத்த நடவடிக்கை – அலி சப்ரி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் மஜீத் காலமானார்.

editor