உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 436 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 436 பேர் நாடளாவிய ரீதியில் நேற்றைய நாளில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து தற்போதுவரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஒரே நாளில் அதிகளவானவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் நபர்களை அடையாளம் காண்பதற்காக பொது இடங்களை அண்மித்த பகுதிகளில் நாடு முழுவதும் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

நாரம்மல துப்பாக்கிச்சூடு – நியமிக்கப்பட்ட விசேட குழு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊடாக சிகிச்சை பெறுவோருக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்

 நகரங்களை தூய்மை படுத்தும் பணி இளைஞர்களுக்கு..