உள்நாடு

இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 4,642 பேர் கைது

(UTV | கொழும்பு) –   தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 187 பேர் இன்று (02) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவர்களில் அதிகமானோர் திருகோணமலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தினுள் பிரவேசிக்கும் மற்றும் வௌியேறும் 12 இடங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வாகனங்களில் பயணித்த சுமார் 250 பேர் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார.

அதன்படி, இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 4,642 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

editor

வீடியோ | நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்போம் – நாங்கள் பலமாக இருக்கிறோம் – எங்களை வீழ்த்த முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டுவதை உடனடியாக நிறுத்துங்கள் – சஜித் பிரேமதாச

editor