உள்நாடு

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை நீடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனூடாக வெளிநாட்டிலிருந்து வருபவர்களில் தொற்றுக்குள்ளானவர்களை இனம் கண்டு கொள்ள முடியும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதாரப் பிரிவினர் வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் சரியான முறையில் பின்பற்றத் தவறினால் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் மறுஅறிவித்தல் வரை விடுமுறை

பிரதமர் ஹரிணி மன்னாருக்கு விஜயம்

editor

டீசல் தட்டுப்பாட்டினால் முடங்கும் இணையத்தள சேவைகள்