உள்நாடு

இன்றும் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக 3 மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மொனராகலை மாவட்டத்தின், வெல்லவாய நகர சபை அதிகார பிரதேசம் மற்றும் வெஹெரயாய, கொட்டம்பபொக்க, புத்தல – ரத்னகம முதலான கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தின், உகன – குமாரிகம கிராம சேவகர் பிரிவும், மாத்தளை மாவட்டத்தில், நாவுல – அளுகொல்ல கிராமசேவகர் பிரிவும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

காலி மாவட்டத்தில் வலுக்கும் கொரோனா

மத்ரஸா மாணவன் மரண சம்பவம் | சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை கைது செய்ய உத்தரவு!

அரசிற்கு மாதாந்த சம்பளத்தை செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை