உள்நாடு

வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 3 வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மக்கள் செயற்பட்ட விதத்தால், நாட்டில் மீண்டும் கொரொனா வேகமாகப் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ​அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தொடர்ச்சியான விடுமுறைகளைக் கொண்ட வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பல்வேறு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என்பவற்றை ஏற்பாடு செய்வதையும் தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

மன்னார் பள்ளமடு பிரதான வீதியில் விபத்து- சம்பவ இடத்தில் ஒருவர் பலி

உள்ளுராட்சித் தேர்தல் முறைமை : மீள் பரிசீலனை செய்ய மூவர் அடங்கிய குழு