உள்நாடு

பயணத்தடை விதிக்கும் எதிர்பார்ப்பு பெருமளவில் இல்லை

(UTV | கொழும்பு) – கொழும்பில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வோர் தொடர்பில் பயணத்தடை விதிக்கும் எதிர்பார்ப்பு பெருமளவில் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் சில வேளைகளில் குறிப்பின்றி அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டிய நிலமைக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவித்த இராணுவத் தளபதி எவ்வாறாயினும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் ஒரு வாரகாலமே உள்ள நிலையில், சுகாதார அமைச்சினால் தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி

சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர்- கைச்சாத்தாகும் ஒப்பந்தம்

உள்ளூராட்சி தேர்தலில் 23 இலட்சம் பேர் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை – அரசாங்கம் முதல் தடவையாக வீழ்ந்துள்ளது – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor