உள்நாடு

இந்திய மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது

(UTV | கொழும்பு) – வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த மீனவர்கள் பயணித்த 5 மீனவ படகுகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் நேற்று இரவு குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கையூடாக குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

உயர் நீதிமன்ற நீதிபதியாக யசந்த கோதாகொடவின் பெயர் பரிந்துரை

பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய இந்தியா கடனுதவி

இன்று முதல் கடவுச் சீட்டு கட்டணம் உயர்த்தப்படுகிறது!