உள்நாடு

இன்று திறக்கப்பட்ட பாடசாலைகளுக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் விடுமுறை

(UTV | கொழும்பு) – மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 05, 11,13 ஆம் தரங்களை தவிர்ந்த ஏனைய தர வகுப்பு கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.

இதற்கமைவாக தரம் 1 தொடக்கம் தரம் 4 வரையிலும் தரம் 06 தொடக்கம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

இன்று திறக்கப்படும் பாடசாலைகள் யாவும் சித்திரைப்புத்தாண்டு விடுமுறைக்காக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி மூடப்படவிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி பெரேரா அறிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் : நிமால் லன்சா

வழங்குவதாக கூறிய உர மானியத்தை ஏன் முறையாக வழங்கவில்லை ? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

editor

நடைமுறைச் சாத்தியமற்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள் – திலித் ஜயவீர

editor