உள்நாடு

அரச நிறுவனங்களை இன்று முதல் பரிசோதனைக்கு

(UTV | கொழும்பு) –  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாக உள்ளது.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் தவறுகளை குறைத்து, பொதுமக்களுக்கு செயல்திறன்மிக்க சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்திம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 28 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Related posts

பொலிஸ் அதிகாரிகளைப்போல் மாறுவேடத்தில் சென்று கொள்ளை

மக்கள் கருத்துக்களின்படியே MCC ஒப்பந்த தீர்மானம் எட்டப்படும்

கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளின் விலை குறைப்பு