உள்நாடு

இலங்கையர்களுக்கு புதிய பிறப்பு சான்றிதழ்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையர்கள் அனைவருக்கும் புதிதாக பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அதில் ஒவ்வொரு நபருடைய பிறப்பு முதல் இறப்பு வரையான தகவல்கள் அடங்கிய தரவுகள் கணினிமயமாக்கப்படும் என பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள பிறப்பு சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டு புதிய தேசிய பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை கல்விச் சுற்றுலாவிற்கு புதிய சட்டங்கள் உள்ளடங்கிய சுற்றுநிரூபம்

புதிய அமைச்சரவை நியமனங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை

தெதுரு ஓயா பெருக்கெடுக்கும் அபாயம் – தாழ்நிலப் பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை

editor