உள்நாடு

சுமார் 68 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது.

(UTV | மாத்தறை) – மாத்தறை – தெய்யந்தர – தெனகம பகுதியில் 68 கிலோகிராம் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் கார் ஒன்றில் பயணித்த போது பொலிசார் மேற்கொண்ட சோதனையின் போது நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதானவர்களில், ஆண் நீர்கொழும்பு கட்டானை பகுதியினையும், பெண் கண்டியை சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு

ஆசியாவின் இரண்டாவது பிரபலமான சுற்றுலாத் தலமாக இலங்கை 🇱🇰!

பொதுத் தேவைக்கு காணிகளை பகிர்ந்தளிக்கக் கோரி மக்கள் போராட்டம்!