உள்நாடு

தெதுருஓயா பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை

(UTV | குருநாகல்) – தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற மணல் கடத்தல் நடவடிக்கையை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த, பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தப்பிச்சென்ற டிப்பர் ரக வாகனத்தின் சாரதியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Related posts

அரச வெசாக் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்

நாடாளுமன்றத்தில் புதிய நிதிக் குழு

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையம் வைத்தியசாலையாக மாற்றம்