உள்நாடு

ஹரின், நளின் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) – மக்கள் சக்தியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி ஆணைக்குழு குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததுடன் அதன் அதிகாரத்தைச் சவால் செய்ததாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ, நளின் பண்டார, ஜே.சீ. அலவத்துவல மற்றும் மயந்த திசநாயக்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் குறித்து சாட்சியங்களை பதிவு செய்ய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் முன் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

Related posts

உதயங்க வீரதுங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்

இலங்கையின் பணம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி!