உள்நாடு

நாளையுடன் ஊரடங்கு தளர்வு : சில பகுதிகள் முடக்கம்

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்தில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது நாளை(09) அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சில மாவட்டங்களின் பொலிஸ் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

கொழும்பு மாவட்டம்
மட்டக்குளி
முகத்துவாரம்
கரையோர பொலிஸ் பிரிவு
டாம் வீதி
புளுமெண்டல்
கொட்டாஞ்சேனை
கிராண்ட்பாஸ்
தெமட்டகொட
வெல்லம்பிட்டி
பொரளை
வாழைத்தோட்டம்

கம்பாஹா மாவட்டம்
வத்தளை
பேலியாகொட
கடவத்தை
றாகமை
நீர்கொழும்பு
பமுனுகம
ஜா-எல
சப்புகஸ்கந்த

களுத்துறை மாவட்டம்
ஹொரணை
இங்கிரிய
வெகட மேற்கு கிராம சேவகர் பிரிவு

குருணாகல் மாவட்டம்
குருணாகல் நகராட்சி பகுதி
குளியாப்பிட்டிய

கேகாலை மாவட்டம்
மாவன்னல்லை
ருவான்வெல்ல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக காணப்படும் எனவும் இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையில் சிலருக்கு கொரோனா வைரஸ்

தனது 74 வது வயதில் காலமானார் முன்னாள் அமைச்சர் குமார வெல்கம

editor

யாழ். குருநகரில் துப்பாக்கி மீட்பு!

editor