உள்நாடு

அனைத்து சிறைச்சாலைகளும் PCR பரிசோதனைக்கு தயார் நிலையில்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையினைக் கருத்திற் கொண்டு சிறைச்சாலைகளில் நோய் தொற்று பரவுவதை தடுக்கும் முகமாகவும், சிறைச்சாலைக்குள் நோய் பரவலை தடுக்கவும் தேவையான முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ,மற்றும் சிறைக்கைதிகள் புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இனால் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்பாராவிதமாக பீசீஆர் (PCR) பரிசோதனை செய்ய தேவையேற்படின் எச்சந்தர்ப்பத்திலும் அதற்கும் தயாராகி இருக்கவும், எந்தவொரு நிலையிலும் அதற்கு முகங்கொடுக்கவும் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதாகவும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இலங்கையில் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகள் எதிர்பாராவிதமாக PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் அதில் கொவிட் தொற்றாளர் இனங்காணப்பட்டால் சிறைச்சாலையில் தொற்று பரவாமல் இருக்க அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் விசேட வேலைத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த எதிர்பாரா PCR பரிசோதனை சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில், இலங்கையில் அனைத்து சிறைச்சாலைகளிலும் வெளியாளர்களுக்கான உள்நுழைவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலையினுள் தொற்று பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பதே எமது திட்டம் எனவும் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • ஆர்.ரிஷ்மா

Related posts

வசீம் தாஜுதீனின் வழக்கை மீண்டும் விசாரணை செய்யுமாறு அநுர அரசாங்கத்திடம் குடும்பத்தினர் கோரிக்கை

editor

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

editor

506 BYD வாகனங்கள் விடுவிக்க இலங்கை சுங்கத் திணைக்களம் இணக்கம்

editor