உலகம்

கிர்கிஸ்தான் ஜனாதிபதி இராஜினாமாவுக்கு தயார்

(UTV | கிர்கிஸ்தான் ) – மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் ஜனாதிபதி சூரோன்பாய் ஜீன்பெகோவ் (Sooronbai Jeenbekov), மத்திய ஆசிய தேசத்தில் அமைதியின்மையால் பிடிக்கப்பட்ட புதிய வெற்றிக்கு ஒரு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டவுடன் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கிர்கிஸ்தானில் கடந்த 3ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று, இதில் 98.14 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் 120 ஆசனங்களில் 61 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பாண்மை பெறவில்லை.

இந்நிலையில், தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்றம் முற்றுகையிடப்பட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், காகிதங்களை கிழித்தெறியும் காட்சி மற்றும் அலுவலகத்தின் மற்றைய பகுதிகளில் தீ பரவியுள்ள காட்சிகளும் அண்மையில் வௌியாகியுள்ளன.

இந்நிலையிலேயே ஜனாதிபதி தான் இராஜினாமா தொடர்பில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகளவில் கொரோனா 11.35 கோடியைக் கடந்தது

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கப்பல்கள் மீது தாக்குதல் தொடர்கிறது.

ஈரான் ஜனாதிபதியின் மரணம்: இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது – ரணில்