உள்நாடு

20ஆம் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் நேற்று(02) 3 ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ , ப்ரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்திய தேசிய மக்கள் சக்தி

editor

தாமரை கோபுரம் நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்காக

வௌியேற தயார் – மஹிந்தவுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் – சாகர காரியவசம்

editor