உள்நாடு

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் – ஐவர் கொண்ட குழு நியமனம்

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க தலைமை நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவில் தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய, நீதிபதிகளான புவனேக அலுவிகாரே, சிசிர டி ஆப்று, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித மல்லல்கொட ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி பரிசீலிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக ஆதரவை இழந்துவரும் இஸ்ரேல் – நெதன்யாகு அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் -ஜோ பைடன்

கல்முனையில் சின்னமுத்து நோய்ப் பரவலை தடுப்பதற்காக விசேட கலந்துரையாடல்.

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைத்தது சீனத் தூதரகம்