உள்நாடு

20 ஆவது அரசியலமைப்பு : நாளை பாராளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) –  20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முதலாம் வாசிப்பிற்காக நாளை(22) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமாயின் 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்ற செயற்பாடுகளுக்காக 3 வாரகாலம் வழங்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பினை அடுத்தே இரண்டாம் வாசிப்பிற்காக அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மியன்மார் பயங்கரவாதிகளின் பிடியிலுள்ள இலங்கையர்களை விடுவிக்க நடவடிக்கை!

கொ​ரோனா சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன

இந்தியா – டில்லியில் இடம்பெற்ற இராமாயணம் சித்திரகாவியம் எனும் கண்காட்சி நிகழ்வில் சிறப்பு அதிதியாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் பங்கேற்பு