உள்நாடு

எம்.கே. சிவாஜிலிங்கம் கைது

(UTV | யாழ்ப்பாணம்) – தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் கோப்பாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திலிபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் தடையுத்தரவினை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது

இம்முறை 75ஆவது சுதந்திர தினம் குறைந்த செலவில்

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த 11 பேர் கைது