உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை

(UTV | கொழும்பு)- நாட்டில் தற்போது காணப்படும் வானிலை இன்று மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, நேற்று(08) காலை 8.30 மணி முதல் இன்று (09) அதிகா​லை 4.30 மணி வரையான காலப்பகுதியில் 121 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கொழும்பில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘Sinopec’ நிறுவனம் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளது

அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் 4வது தொகுதி இலங்கைக்கு நன்கொடை

மீண்டும் ஆரம்பிக்கப்படும் இலங்கை – இந்தியா கப்பல் சேவை !