உள்நாடு

இலங்கையில் உயரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

(UTV | கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,092 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 43 பேர் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய 6 பேருக்கும், மாலைதீவில் இருந்து வந்த 6 பேருக்கும், இந்தியாவில் இருந்து வந்த 3 பேருக்கும், இந்திய கடலோடி ஒருவருக்கும், கட்டாரில் இருந்து வந்த 26 பேருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

மேலும், தற்போது 201 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, தொற்றிலிருந்து 2,879 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சாரம் மற்றும் பெட்ரோலியம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மாவடிப்பள்ளி பாலத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் – சந்தேக நபர்கள் அரபுக் கல்லூரிக்குள் நுழைந்தால் பிணை இரத்து

editor

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு